states

பாலியல் புகாரளித்த பெண் வெட்டிக்கொலை

பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலம் என்பதை  நோக்கி ஜெட் வேகத்தில்  பயணித்து வரும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்  களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரு கின்றன. கிட்டத்தட்ட அம்மாநிலத் தில் பாலியல் குற்றச் சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லை என்று  சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு  எதிரான வன்முறை மோசமான அள வில் உள்ளது.

இந்நிலையில், கௌசம்பி பகுதி யைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு வரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பவன் நிஷாத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக  போக்சோ வழக்கில் கைது செய்  யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். பவன் நிஷாத்தின் சகோதரர் அசோக் என்பவரும் வேறொரு கொலை வழக்கு தொடர்பாக சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்  கள் இருவரும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

பவன் நிஷாத் மீது பாலியல் குற்றம் சாட்டிய சிறுமியின் வீட்டிற்கு  சென்று, பாலியல் வழக்கை வாபஸ் வாங்குமாறு பவன் மற்றும் அசோக் சிறுமியையும், குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர். இதற்கு சிறுமி யின் குடும்பத்தினர் மறுப்பு தெரி விக்கவே, ஆத்திரமடைந்த சகோத ரர்கள் புகார் அளித்த பெண்ணை சாலையில் வைத்து பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு இருவரும் அங்கி ருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சமர் பக தூர் சம்பவ இடத்திற்கு சென்று இரு வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்  பட்டுள்ளதாகவும், விரைவில் இரு வரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

பாலியல் புகாரளித்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்ப வம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலை யில்,  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு எவ்வித அச்சமும், மரியாதையும் இல்லாத சூழல் நிலவி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.